என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன்
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.
என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன்.
உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.
என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன்
உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.
இருதியாய்
என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய்
உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.
ஆனால்
இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை!
உன் காதல் பயணத்தை முடித்திடவே!
Archive for the ‘என் கிறுக்கல்கள்’ Category
காதல் காலாவதி!
Posted in என் கிறுக்கல்கள், tagged தமிழ், தமிழ் கிறுக்கல்கள், Tamil Poem on November 27, 2009 | 22 Comments »
அசோகன்!!
Posted in என் கிறுக்கல்கள், tagged அசோகன், தமிழ், தமிழ் கவிதை, Tamil Poem, War & Peace on November 23, 2009 | 16 Comments »
எதிரிகளை வீழ்த்தினேன் - வெற்றி
எனும் வாகையைச் சூடிடவே!
நன்மக்கள் பலரை பலியாக்கினேன் – மென்மேலும்
புகழ்கள் சில நாடிடவே!
இன்று…
போர்கள் பல முடிந்தன…
நினைத்ததனைத்தும் கையில் கிடைத்தது…
இப்புவி,என்னை எதிப்பாரற்று கிடந்தது…
ஆனால்…
நாடி… தேடி… போராடி…
பெற்ற அந்த வெற்றி…
இன்பம் என்றொன்றை தந்திடவில்லை எனக்கு!
மாறாக…
விலகிச் சென்றது…
என்னை விட்டு…. என் மனதை விட்டு…
நிம்மதி என்ற ஒன்று மட்டும்.
இது…
எதற்கென்று தெரியவில்லை..
ஏனென்று புரியவில்லை…
வினாக்கள் நூறு எழுந்த என் நெஞ்சில்,
விடை ஒன்று கூட எழுந்திடாமல் போனது!
போருடையை கலைந்தேன்…
பொறுமையை பழகினேன்…
விழிகளை மூடி விடியலைத் தேட….
மீண்டும் ஒரு போர் உதிப்பதை உணர்ந்தேன்…
இம்முறை…
உலகினில் இல்லை!
என் உள்ளத்தினில்!
போர் வாள்கள் என் [...]
எத்தனை நாள் காத்திருப்பேனோ?!?!
Posted in என் கிறுக்கல்கள், tagged தமிழ், தமிழ் கவிதை, தமிழ் கிறுக்கல்கள் on November 20, 2009 | 12 Comments »
எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
விழிப் பார்வை என் மேல் விழுந்திட!
எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
கை விரல்கள் என்னை தீண்டிட!
எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
இதழால் என் இதழை உரசிட!
எத்தனை நாள் காத்திருந்தேன் – உன்
தேகம் அணைத்து உறங்கிட!
இன்னும்…
எத்தனை நாள் காத்திருப்பேன் – உன்
செவிதழ்கள் அம்மா என்றெனை அழைத்திட!
கடமை!
Posted in என் கிறுக்கல்கள், tagged 55 Fiction, என் கிறுக்கல்கள், கடமை on November 4, 2009 | 27 Comments »
உன் கிட்ட கொஞ்சம் பேசனும்..
தாரளமாக பேசலாமே!
நீ அவளை காதலிக்கிறாயா???
ஏன் இந்த கேள்வி??!!
இல்லை, நீ கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை… ஆனால் என்னை மட்டும் அவளிடம் நெருங்க விட மாட்டேன் என்கிறாயே. அதனால் தான் கேட்டேன்…
அடேய் மடையா… எப்போது அவள் என் கை பிடித்தாலோ.. அப்போதிலிருந்து நான் அப்படி தான் இருக்க வேண்டும்… அது காதல் இல்லை….. என் கடமை…
பொறுமை இழந்து பளீர் என அடித்தது அடை மழை!
சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டது அவளின் குடை!
தற்கொலை
Posted in என் கிறுக்கல்கள், tagged தமிழ், தமிழ் கவிதை, Tamil Poem, தற்கொலை on October 22, 2009 | 16 Comments »
தான் இப்புவியில் இருந்து சொல்ல நினைத்ததை
கொஞ்சம் மாற்றி
இறந்து சொல்ல நினைப்பதுதான் தற்கொலையோ??!!!
காணவில்லை!!!
Posted in என் கிறுக்கல்கள், tagged tamil, தமிழ், தமிழ் கிறுக்கல்கள், தமிழ் கவிதை, Tamil Poem on October 20, 2009 | 11 Comments »
விபூதிப் பட்டையும் குங்குமப் பொட்டையும் இட்டுக் கொண்டாய்,
இந்துவாய் வாழ்ந்திட.
இயேசுவின் சிலுவையையும் கழுத்தில் சுமந்து நடந்தாய்,
கிருத்துவனாய் வாழ்ந்திட.
தலையில் குல்லாவும் முகத்தில் தாடியும் வைத்துக் கொண்டாய்,
இஸ்லாமியனாய் வாழ்ந்திட.
என்ன செய்தாய்… அட என்ன தான் செய்யப் போகிறாய்…
மனிதனாய் வாழ்ந்திட!!!
குடை
Posted in என் கிறுக்கல்கள், tagged தமிழ் கவிதை, Tamil Poem, குடை on October 14, 2009 | 18 Comments »
ஏய் குடையே! – உன்னை
இன்று முதல் என் நண்பனாக்கிக்கொண்டேன்.
காரணம் மொழிகிறேன்.அதையும் கேள்.
என்னவளை நான் தொடும் முன் – அந்த
மழை தொடாமல் நீ பார்த்துக்கொண்டதனால் தான்.
அடையாள அட்டை!
Posted in என் கிறுக்கல்கள், tagged tamil, தமிழ், என் கிறுக்கல்கள், தமிழ் கவிதை, Tamil Poem on October 9, 2009 | 8 Comments »
உணர்வுப்பூர்வமான அடையாளங்களை தொலைத்துவிட்டு…
உயிரில்லாத அட்டைகளை கொண்டு அலைகிறோம்…
மனிதர்களாய் இல்லை… வெறும் மண் பொம்மைகளாய்…
இதெல்லாம்…
பெரும் உண்மைகளை நிரூபிக்க அல்ல…
நம்மை நாமே நிரூபித்துக் கொள்ளவே!!!
யுத்த பூமி!
Posted in என் கிறுக்கல்கள், tagged தமிழ், தமிழ் கிறுக்கல்கள், தமிழ் கவிதை, Tamil Poem, யுத்த பூமி on August 31, 2009 | 6 Comments »
புத்தம் மதித்த பூமி இருந்தது ஒன்று – அது
சதி யுத்தம் செய்யும் மண்ணானது இன்று.
அங்கு அமைதி போதிக்கும் மந்திர ஓசை ஒலிப்பது நின்று எங்கும் தமிழீழத்தின் அழுகுரல் மட்டுமே கேட்குது இன்று.
மதம் போற்றி வளர்த்திட திளைத்த நாடே…
ஈழத் தமிழ் மகளின் மானம் காக்க மறுத்ததேனோ??
மதம் தெரிந்த உனக்கு…
கொஞ்சம் மனித நேயமும் தெரியாமல் போனதேனோ???
உன்னாலே… உன்னாலே…
Posted in என் கிறுக்கல்கள், tagged tamil, தமிழ் கவிதை, Tamil Poem, உன்னாலே... உன்னாலே..., unnale unnale on August 7, 2009 | 6 Comments »
என் பொழுது விடிந்தது – நீ
தூக்கம் களைந்து சோம்பல் முறித்த போது தான்.
என் கண்ணில் வெளிச்சம் தெரிந்தது – உன்
விழிப் பார்வை என் மேல் கொஞ்சம் விழுந்த போது தான்.
என்னுள்ளே புத்துணர்வும் பூத்தது – உன்
அழகு மேனி குளிர் நீர் துளிகளை சுமந்த போது தான்.
எனக்கு தாகம் எடுத்தது – உன்
நுனி நாக்கும் தேநீர் ருசித்த போது தான்.
எனக்குள் இருந்த பசியும் புரிந்தது – உன்
செவ்விதழ்கள் கொஞ்சம் அன்னம் பருகிய போது தான்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாமடி…
சுருங்கச் சொன்னால்…
நான் இன்னும் உயிர் [...]
Bala Nagesh S






